கோவையில் இருந்து சார்ஜா செல்லும் ஏர் அரேபியா விமானத்தில் கோளாறு - பயணிகள் அவதி

கோவையில் இருந்து இன்று காலை 4.15 மணிக்கு ஏர் அரேபியா விமானம், சார்ஜா செல்வதற்காக ஓடுதளத்தில் இருந்து புறப்பட தயரானது. அப்போது, விமானத்தின் ஒரு டயர் பஞ்சரானதால், பயணிகள் அனைவரும் அவசரமாக தரையிறக்கப்பட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.


கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட உள்ளிட்ட நகரங்களும் தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வழக்கம்போல இன்று ஜூன்.1 காலை 4:15 மணிக்கு சார்ஜா செல்லக்கூடிய ஏர் அரேபியா விமானம் 145 பயணிகளுடன் ஓடுதளத்தில் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தின் ஒரு டயர் பஞ்சராகி இருப்பது தெரியவந்தது. இதனால் விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் அவசரமாக தரையிறக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து விமானத்தின் கோளாறு சரி செய்த பின்னர் மாலை 6 மணிக்கு விமானம் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக விமான பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...