சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு – விவசாயிகள், காவல்துறை இடையே தள்ளுமுள்ளு

காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏலம் விட முடியாமல் அறநிலைத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இனம் நிலங்களை கடந்த மூன்று தலைமுறைகளாக விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான நிலத்தை நேற்று முன்தினம் ஏலம் விடப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலகத்தில் அறிவிப்பை ஒட்டிவைத்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று ஏலம் துவங்கும் முன்பே விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையிட்டனர். ஆனால் விவசாயிகளை காவல்துறையினரை வைத்து தடுத்து கோவில் மேல் மண்டபத்தில் தனிநபர்கள் 15 பேர் மட்டுமே அனுமதித்து ஏலம் விடமுயற்சி செய்தனர். ஆனால், தடைகளையும் மாறி ஏலம் நடைபெறும் இடத்திற்கு சென்று விவசாயிகள் கோஷமிட்டனர். இதனால் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையை தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



முதல்வர் ஸ்டாலின் மற்றும் எம்பி கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ் ஆகியோரின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு என்று பெண் விவசாயிகள் ஆவேசமாக பேசினர்.

இதனால் ஏலம் நடத்தமுடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். அறநிலையத்துறை அலுவலகத்திற்குள்ளும் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் சிவன்மலை பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...