உக்கடம், பெரியகுளத்தில் சைரன் பொருத்திய ரோந்து வாகனம் மூலம் கண்காணிப்பு தீவிரம்

உக்கடம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் ண்காணிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. சைரன் மற்றும் மைக் மூலம் ரோந்து செல்லும் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


கோவை: மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், கிருஷ்ணம்பதி, குமாரசாமி குளம், குறிச்சி குளம் உட்பட ஏழு குளங்கள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பூங்காக்கள், நடைபாதை உள்ளிட்ட அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இக்குளக்கரைகளை பராமரிக்க, போதிய உபகரணங்கள் இல்லாததுடன், கண்காணிப்பும் இல்லாததால் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும், காதல் ஜோடிகளின் அத்துமீறல் காண்போரை முகம் சுழிக்க வைக்கிறது.

இதையடுத்து, சிறிய 'எலக்ட்ரிக்' ரோந்து வாகனம், நடைபாதை சுத்தம் செய்யும் இயந்திரம் உள்ளிட்டவை தற்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

உக்கடம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரு ரோந்து வாகனங்கள் வாயிலாக கண்காணிக்கப்படுகிறது. இந்த வாகனத்தில், 1.5 அடி உயரத்தில் நின்றுகொண்டே சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை, கண்காணிக்க முடியும். சைரன், மைக் மூலம், ரோந்து செல்லும் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...