கோவை- கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தும் வழித்தடங்களில் தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது- மாவட்ட வழங்கல் அதிகாரி தகவல்


கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படும் 18 வழித் தடங்கள் கண்டறியப்பட்டு அந்த வழிகளில்  தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தெரிவித்தார்.

கோவை ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர் செல்லும் பயணிகள் ரயிலில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தலைமையிலான அதிகாரிகள் கோவை ரயில் நிலையத்தில் நின்று இருந்த திருச்சூர் பயணிகள் ரயிலை சோதனையிட்டனர்.

அப்போது சிறு, சிறு மூட்டைகளாக 1.5 டன் அளவிற்கு ரேசன் அரிசி பயணிகளின் இருக்கைகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த 1.5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். எனினும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யாரும் சிக்கவில்லை.

இந்நிலையில் இந்த சோதனை தொடர்பாக பேட்டியளித்த மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன், திருச்சூர் செல்லும் ரயிலில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டு ரேசன் அரிசியை பறிமுதல் செய்ததாக தெரிவித்தார்.

மேலும், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டம் என்பதால் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி அதிகளவு கடத்தப்படுவதாகவும், கோவையில் இருந்து கேரளாவிற்கு அரிசி கடத்தப்படும் 18 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த 18 வழித்தடங்களில் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும், தற்போது நடைபெற்றுள்ள இந்த சோதனையில் கடத்தல்காரர்கள் யாரும் சிக்கவில்லை எனவும் மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...