மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு

மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதிகளில் வனத்துறையினர் யானைகளின் கணக்கெடுப்பு பணியை மூன்று நாட்களாக நடத்திவருகின்றனர். கணக்கெடுப்பில் யானைகளின் நடமாட்டம் மற்றும் நீர்நிலைகளில் அவற்றின் தொகை குறித்து தகவல் சேகரிக்கப்படுகிறது.


கோவை: கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சிறுமுகை ஆகிய வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கேரள வனப்பகுதியில் இருந்து வரும் யானைகளின் வலசைப் பாதையாகவும் மேட்டுப்பாளையம் வனப்பகுதி விளங்கி வருகிறது.

தற்போது வனப்பகுதியில் யானைகள் இடம்பெயர்ந்து செல்வது அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.



அதன்படி மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின பயிற்சியக உதவி வன பாதுகாவலர்கள் 5 குழுக்களாக பிரிந்து ஜக்கனாரி, கல்லாறு, நெல்லி மலை, சுண்டப்பட்டி பிரிவு, கண்டியூர் ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளிலும், சிறுமுகை வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின பயிற்சியக உதவி வனபாதுகாவலர்கள் 6 குழுக்களாக பிரிந்து ஓடந்துறை, கூத்தாமண்டி வடக்கு, தெற்கு, பெத்திக் குட்டை,உலியூர் ஆகிய பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதல் நாள் யானைகளின் நடமாட்டம் குறித்து நேரிடையாகவும், இரண்டாவது நாளான 24 ஆம்தேதி நேர்கோட்டில் வனப்பகுதியில் இடது மற்றும் வலது புறம் யானைகளின் சாணம் சிறுநீர் மற்றும் கால் தடயங்களை வைத்தும் யானைகள் கணக்கெடுக்கும் பணியிலும் ஈடுபட்டனர். 



மூன்றாவது நாளான நேற்று (மே.25) வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகள், கசிவு நீர் குட்டைகள், தடுப்பணைகள் ஆகிய நீர்நிலைகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். யானைகள் கணக்கெடுக்கும் பணி தினசரி காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...