கோவையில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

கோவையில் 27 வயதான வாலிபர் நட்பு மூலம் ஈர்த்து 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது காரணமாக 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது.


கோவை: கோவை ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் செந்தில் (வயது 27) இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுமியின் தந்தை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அதில் செந்தில் அந்த சிறுமி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் செந்திலை கைது செய்தனர். 

இது தொடர்பாக கோவையில் உள்ளபோக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று மே.24 தீர்ப்பு கூறப்பட்டது. 

அதில் குற்றம் சாட்டப்பட்ட செந்திலுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு கூறினார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ4 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து செந்திலை போலீசார் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...