கொங்கு மண்டலத்தில் அடுத்த ஒருவாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

கொங்கு மண்டலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அடுத்த ஒருவாரம் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வலுப்பெற்று நல்ல மழையை கொடுக்கும் என்று கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: மழை குறித்தும், வரவுள்ள பருவமழை குறித்தும் அண்மையில் கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் இன்று (25.4.2024) முதல் மழையின் அளவு படிப்படியாக குறையும். கொங்கு மண்டலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ஆங்காங்கே மிதமான வெப்ப சலனம் மழைக்கு அடுத்த ஒரு வாரம் வாய்ப்புள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது என்று இந்த மாத இறுதியில் அறிவித்தாலும் உண்மையில் மழை அடுத்த 10 நாட்களுக்கு அவ்வளவாக இருக்காது. இதற்குக் காரணம் எம் ஜே ஓ வங்கக் கடலிலிருந்து பசிபிக் கடலை நோக்கி நகர்வதால் இந்திய நிலப்பரப்பில் மழையின் தாக்கம் குறைவாக காணப்படும்.

இதனால் தென்மேற்கு பருவமழை பொய்த்து விடும் என்று நம்ப வேண்டாம். சற்று தாமதமாக ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வலுப்பெற்று நல்ல மழையை கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...