கொங்கு மண்டலத்தில் அடுத்த ஒருவாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

கொங்கு மண்டலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அடுத்த ஒருவாரம் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வலுப்பெற்று நல்ல மழையை கொடுக்கும் என்று கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: மழை குறித்தும், வரவுள்ள பருவமழை குறித்தும் அண்மையில் கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் இன்று (25.4.2024) முதல் மழையின் அளவு படிப்படியாக குறையும். கொங்கு மண்டலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ஆங்காங்கே மிதமான வெப்ப சலனம் மழைக்கு அடுத்த ஒரு வாரம் வாய்ப்புள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது என்று இந்த மாத இறுதியில் அறிவித்தாலும் உண்மையில் மழை அடுத்த 10 நாட்களுக்கு அவ்வளவாக இருக்காது. இதற்குக் காரணம் எம் ஜே ஓ வங்கக் கடலிலிருந்து பசிபிக் கடலை நோக்கி நகர்வதால் இந்திய நிலப்பரப்பில் மழையின் தாக்கம் குறைவாக காணப்படும்.

இதனால் தென்மேற்கு பருவமழை பொய்த்து விடும் என்று நம்ப வேண்டாம். சற்று தாமதமாக ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வலுப்பெற்று நல்ல மழையை கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...