உடுமலையில் நாராயண கவிராயரின் 43 -வது நினைவு நாள் கடைபிடிப்பு

உடுமலைப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு உடுமலை நாராயணகவியின் பெயர் வைக்க வேண்டும் என்று உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவையின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பூளவாடி பகுதியைச் சேர்ந்த உடுமலை நாராயண கவிராயர் ஏறத்தாழ 40 ஆண்டு காலம் நாடக உலகிலும், திரைத்துறையிலும் தனது பகுத்தறிவு பாடல்களாலும், தேசபக்தி பாடல்களாலும் தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று இருந்தார்.

இவரின் 43 வது நினைவு நாள் உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவையின் சார்பில், உடுமலை நாராயணகவிராயர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது.

மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பேரவையின் சார்பாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடுமலைப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு உடுமலை நாராயணகவியின் பெயர் வைத்திட தமிழக அரசையும், நகராட்சி நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்வது, உடுமலை நாராயணகவியின் பிறந்தநாளை அரசு சார்பில் கொண்டாடுவது போல, நினைவு நாளையும் அரசு சார்பில் அனுசரிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வது,உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் உள்ள நூலகத்திற்கு, புதிய நூல்கள் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் இங்கு பயிற்சி பெறுவதால், குடிமைப் பயிற்சி நூல்கள் உட்பட புதிய நூல்களை மணிமண்டப நூலகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.பேரவையின் 30-வது ஆண்டு நிறைவு விழாவை ஜூலையில் விமரிசையாக கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.



இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் உடுமலை நாராயணகவியின் பேரன் திருப்பூர் வழக்கறிஞர் சுந்தரராசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பேரவையின் தலைவர் அமிர்தநேயன் அனைவரையும் வரவேற்று, தீர்மானங்களை வாசித்தார்.

இந்நிகழ்வில் இலக்கியப் பேரவை உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், கொங்கு மண்டல ஆய்வு மையத்தின் நிர்வாகி எழுத்தாளர் உடுமலை ரவி, பாவலரேறு தேன்தமிழ்ப் பாசறை நிர்வாகி கொழுமம் ஆதி, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் நடராஜன், மளிகைசெல்வம் என்கின்ற ஜி.செல்வராஜ், பேரவையின் புரவலர் பா.விக்னேஷ், மாணவர்கள் எழில் குமரன், ஜெயமகேஸ்வரி, பவித்ரா, வேலுமணி, மணிமண்டப நூலகர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக பேரவையின் துணைத்தலைவர் ஆசிரியர் செல்லத்துரை நன்றி கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...