நேற்று பெய்த கனமழை காரணமாக துடியலூரை அடுத்துள்ள பொன்னூத்தம்மன் கோவிலில் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு நீர் நிலைகள் வறண்டு காட்சியளித்தன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான தடாகம், சின்ன தடாகம், 24 வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

கோவை, துடியலூரை அடுத்துள்ள பொன்னூத்தம்மன் கோவிலில் இருந்த நீர்வீழ்ச்சி வறண்டு காணப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று பெய்த கனமழை காரணமாக தற்போது நீர்வீழ்ச்சியில் மழைநீர் வரத்து துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை, துடியலூரை அடுத்துள்ள பொன்னூத்தம்மன் கோவிலில் இருந்த நீர்வீழ்ச்சி வறண்டு காணப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று பெய்த கனமழை காரணமாக தற்போது நீர்வீழ்ச்சியில் மழைநீர் வரத்து துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.