மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது - கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை பராமரிப்புத்துறை அறிவுரை

மழைக்காலங்களில் கால்நடைகளை திறந்தவெளியில் கால்நடை மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம், இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது திறந்தவெளியில் மாடுகளை கட்டக்கூடாது என கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இன்று மே.22 அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மழைக்காலங்களில் கால்நடைகளை திறந்தவெளியில் கால்நடை மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம், இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது திறந்தவெளியில் மாடுகளை கட்டக்கூடாது. உயர் மின்னழுத்த மின் கம்பிகள் செல்லக்கூடிய இடங்களுக்கு கால்நடைகளை அருகில் கொண்டு செல்லக்கூடாது.

மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது. தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளிலிருந்து கால்நடைகளை மேட்டுப்பாங்கான பகுதிக்கு உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். கால்நடைகள் கட்டும் கொட்டகையினை நல்லமுறையில் பராமரித்து, சுகாதாரமான தண்ணீர் மற்றும் தீவனங்கள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை சார்ந்த அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகள், தடுப்பூசிகள், தாதுஉப்புக் கலவை போதுமானளவு கையிருப்பில் உள்ளது. பருவ மழைக் காலங்களில் கால்நடை பாதுகாத்திடும் பொருட்டு, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வழங்கப்படும் மேற்படி சேவைகளை கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தியும், மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை வழுவாது பின்பற்றுமாறு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...