மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது - கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை பராமரிப்புத்துறை அறிவுரை

மழைக்காலங்களில் கால்நடைகளை திறந்தவெளியில் கால்நடை மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம், இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது திறந்தவெளியில் மாடுகளை கட்டக்கூடாது என கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இன்று மே.22 அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மழைக்காலங்களில் கால்நடைகளை திறந்தவெளியில் கால்நடை மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம், இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது திறந்தவெளியில் மாடுகளை கட்டக்கூடாது. உயர் மின்னழுத்த மின் கம்பிகள் செல்லக்கூடிய இடங்களுக்கு கால்நடைகளை அருகில் கொண்டு செல்லக்கூடாது.

மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது. தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளிலிருந்து கால்நடைகளை மேட்டுப்பாங்கான பகுதிக்கு உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். கால்நடைகள் கட்டும் கொட்டகையினை நல்லமுறையில் பராமரித்து, சுகாதாரமான தண்ணீர் மற்றும் தீவனங்கள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை சார்ந்த அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகள், தடுப்பூசிகள், தாதுஉப்புக் கலவை போதுமானளவு கையிருப்பில் உள்ளது. பருவ மழைக் காலங்களில் கால்நடை பாதுகாத்திடும் பொருட்டு, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வழங்கப்படும் மேற்படி சேவைகளை கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தியும், மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை வழுவாது பின்பற்றுமாறு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...