கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - ஆனைமலை, மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு

வெள்ளத்தில் சிக்கிதவிப்பவர்களை மீட்பதற்காக ரப்பர் படகு, லைப் பாய், லைப் ஜாக்கெட், மழை வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளில் வெள்ளத்தை உடனே அகற்றுவதற்காக நவீன மோட்டார், ஜெனரேட்டர், மரங்களை வெட்டி அகற்றுவதற்காக பவர் ஷா என 43 வகையான உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கனமழை அதிகம் பெய்யக்கூடும் என்பதை கணித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.



இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 30 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் உள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் துணை ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர்கள் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் ஆனைமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.



வெள்ளத்தில் சிக்கிதவிப்பவர்களை மீட்பதற்காக ரப்பர் படகு, லைப் பாய், லைப் ஜாக்கெட், மழை வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளில் வெள்ளத்தை உடனே அகற்றுவதற்காக நவீன மோட்டார், ஜெனரேட்டர், மரங்களை வெட்டி அகற்றுவதற்காக பவர் ஷா என 43 வகையான உபகரணங்களுடன் மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் தற்போது (மே.20) உள்ளனர்.



வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை ரப்பர் படகு மற்றும் கயிறு மூலம் பாதுகாப்பாக மீட்பது, ஊட்டி மற்றும் கோத்தகிரி மலைப் பாதையில் மண்சரிவு காரணமாக சாலையின் குறுக்கே விழும் மரங்களை நவீன எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றுவது, போக்குவரத்தை சீர் செய்வது, இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவிப்பவர்களை மீட்பது உட்பட பல்வேறு மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். மழை பாதிப்பு சம்மந்தமான தொடர்புக்கு பேரிடர் மேலாண்மை உதவி எண் 1077ஐ அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...