கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - ஆனைமலை, மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு

வெள்ளத்தில் சிக்கிதவிப்பவர்களை மீட்பதற்காக ரப்பர் படகு, லைப் பாய், லைப் ஜாக்கெட், மழை வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளில் வெள்ளத்தை உடனே அகற்றுவதற்காக நவீன மோட்டார், ஜெனரேட்டர், மரங்களை வெட்டி அகற்றுவதற்காக பவர் ஷா என 43 வகையான உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கனமழை அதிகம் பெய்யக்கூடும் என்பதை கணித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.



இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 30 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் உள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் துணை ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர்கள் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் ஆனைமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.



வெள்ளத்தில் சிக்கிதவிப்பவர்களை மீட்பதற்காக ரப்பர் படகு, லைப் பாய், லைப் ஜாக்கெட், மழை வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளில் வெள்ளத்தை உடனே அகற்றுவதற்காக நவீன மோட்டார், ஜெனரேட்டர், மரங்களை வெட்டி அகற்றுவதற்காக பவர் ஷா என 43 வகையான உபகரணங்களுடன் மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் தற்போது (மே.20) உள்ளனர்.



வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை ரப்பர் படகு மற்றும் கயிறு மூலம் பாதுகாப்பாக மீட்பது, ஊட்டி மற்றும் கோத்தகிரி மலைப் பாதையில் மண்சரிவு காரணமாக சாலையின் குறுக்கே விழும் மரங்களை நவீன எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றுவது, போக்குவரத்தை சீர் செய்வது, இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவிப்பவர்களை மீட்பது உட்பட பல்வேறு மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். மழை பாதிப்பு சம்மந்தமான தொடர்புக்கு பேரிடர் மேலாண்மை உதவி எண் 1077ஐ அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...