தாராபுரம் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

தாராபுரம்பேருந்து நிலையம், உடுமலை சாலை, பொள்ளாச்சி சாலை, சின்னக் கடைவீதி, பழனி சாலை, அலங்கியம் சாலை, மணக்கடவு, கோவிந்தாபுரம், காளிபாளையம் மற்றும் வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான பேருந்து நிலையம், உடுமலை சாலை, பொள்ளாச்சி சாலை, சின்னக் கடைவீதி, பழனி சாலை, அலங்கியம் சாலை, மணக்கடவு, கோவிந்தாபுரம், காளிபாளையம் மற்றும் வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாலை ஐந்து மணி முதல் லேசாக பெய்ய துவங்கிய மழை, சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.



இந்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரம் என்பதால் தங்களது பணியை முடித்துவிட்டு வரும் பொது மக்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்றனர். மாலை வேலை என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.



இந்த மழை காரணமாக மாலை நேரத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.



தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அமராவதி ரவுண்டானா பகுதி, பொள்ளாச்சி சாலை, பூக்கடைக்காரனர், மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...