வால்பாறையில் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது

வால்பாறையில் பருவமழை நேரத்தில் சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. முன்னெச்சரிக்கைகள், முகாம்கள் அமைத்தல், கால்நடைகள் காக்கவும் வன உயிரினங்கள் புகுதல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்து வரும் இந்த மழையால் வால்பாறையில் உள்ள சோலையார் அணை, சின்னக்கல்லார் அணை, நீரார் அணை மற்றும் அக்காமலை செக்டேம் ஆகியவை நிரம்பி வழியும் இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.



அதிக மழை பெய்யும் போது குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்கும் வண்ணமும், சாலைகளில் மரங்கள் தடுக்கவும் மண்ணரிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறியவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் மழையால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொள்ளாச்சி சப் கலெக்டர் கேத்தரின் சரண்யா தலைமையில் வாசுதேவன் மற்றும் அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏழு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. வால்பாறை அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நகராட்சி திருமண மண்டபம் மேலும் அட்டகட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சோலையார் அணை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவைகள் முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து அதிக மழை பெய்வதற்கு முன்பதாகவே அவர்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மருத்துவ துறை சார்பாக டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கொசுகளை ஒழிக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விதமான மருந்துகளை சேமித்து வைக்க வேண்டும் என்றும் தெரியப்படுத்தினர்.



மேலும் அரசு பேருந்துகளை சரியாக செயல்படுத்த வேண்டும் மேலும் மின்சார துறை சார்பாக மின் துண்டிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்றும் வனத்துறை சார்பாக வனவிலங்குகள் ஊருக்குள் போகாமல் தடுக்க வேண்டும் ஆதிவாசி பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் மண்ணரிப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்பாடாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆலோசனை செய்ய வேண்டும் என்றும்.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....