வால்பாறையில் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது

வால்பாறையில் பருவமழை நேரத்தில் சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. முன்னெச்சரிக்கைகள், முகாம்கள் அமைத்தல், கால்நடைகள் காக்கவும் வன உயிரினங்கள் புகுதல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்து வரும் இந்த மழையால் வால்பாறையில் உள்ள சோலையார் அணை, சின்னக்கல்லார் அணை, நீரார் அணை மற்றும் அக்காமலை செக்டேம் ஆகியவை நிரம்பி வழியும் இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.



அதிக மழை பெய்யும் போது குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்கும் வண்ணமும், சாலைகளில் மரங்கள் தடுக்கவும் மண்ணரிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறியவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் மழையால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொள்ளாச்சி சப் கலெக்டர் கேத்தரின் சரண்யா தலைமையில் வாசுதேவன் மற்றும் அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏழு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. வால்பாறை அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நகராட்சி திருமண மண்டபம் மேலும் அட்டகட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சோலையார் அணை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவைகள் முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து அதிக மழை பெய்வதற்கு முன்பதாகவே அவர்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மருத்துவ துறை சார்பாக டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கொசுகளை ஒழிக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விதமான மருந்துகளை சேமித்து வைக்க வேண்டும் என்றும் தெரியப்படுத்தினர்.



மேலும் அரசு பேருந்துகளை சரியாக செயல்படுத்த வேண்டும் மேலும் மின்சார துறை சார்பாக மின் துண்டிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்றும் வனத்துறை சார்பாக வனவிலங்குகள் ஊருக்குள் போகாமல் தடுக்க வேண்டும் ஆதிவாசி பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் மண்ணரிப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்பாடாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆலோசனை செய்ய வேண்டும் என்றும்.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...