கோவை அருகே பெரியகளந்தையில் முதியவரை தாக்கிய அண்ணன், தம்பிக்கு கடுங்காவல் தண்டனை

தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மயில்சாமி என்பவரை தாக்கிய குற்றத்திற்காக சிவக்குமாருக்கு 3 ஆண்டு 7 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அவரது அண்ணன் பழனிச்சாமிக்கு 4 ஆண்டு ஒரு மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை, நெகமம் அருகே உள்ள பெரியகளந்தையைச் சேர்ந்தவர் மயில்சாமி (வயது 60). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சிவகுமார் (வயது 35). இவரது அண்ணன் பழனிச்சாமி (வயது 37). அங்குள்ள தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த (7.5.18) அன்று ஏற்பட்ட தகராறில் சிவகுமாரும், அவரது அண்ணன் பழனிச்சாமியும் சேர்ந்து மயில்சாமியை கல்லாலும், கைகளாலும் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து நெகமம் போலீசில் மயில்சாமி புகார் செய்தார். இதுதொடர்பாக சப் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், செல்வராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சிவகுமார், பழனிச்சாமி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு பொள்ளாச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (எண்2) நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மே.15 இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாசம் குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 3 ஆண்டு 7 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அவரது அண்ணன் பழனிச்சாமிக்கு 4 ஆண்டு ஒரு மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...