கோவை அருகே பெரியகளந்தையில் முதியவரை தாக்கிய அண்ணன், தம்பிக்கு கடுங்காவல் தண்டனை

தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மயில்சாமி என்பவரை தாக்கிய குற்றத்திற்காக சிவக்குமாருக்கு 3 ஆண்டு 7 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அவரது அண்ணன் பழனிச்சாமிக்கு 4 ஆண்டு ஒரு மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை, நெகமம் அருகே உள்ள பெரியகளந்தையைச் சேர்ந்தவர் மயில்சாமி (வயது 60). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சிவகுமார் (வயது 35). இவரது அண்ணன் பழனிச்சாமி (வயது 37). அங்குள்ள தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த (7.5.18) அன்று ஏற்பட்ட தகராறில் சிவகுமாரும், அவரது அண்ணன் பழனிச்சாமியும் சேர்ந்து மயில்சாமியை கல்லாலும், கைகளாலும் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து நெகமம் போலீசில் மயில்சாமி புகார் செய்தார். இதுதொடர்பாக சப் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், செல்வராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சிவகுமார், பழனிச்சாமி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு பொள்ளாச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (எண்2) நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மே.15 இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாசம் குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 3 ஆண்டு 7 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அவரது அண்ணன் பழனிச்சாமிக்கு 4 ஆண்டு ஒரு மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...