தொண்டாமுத்தூர் பகுதியில் 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதைப் பொருள்களை பறிமுதல் செய்து 6 பேர் கைது

மே 15, கோவையில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய அருகே உயர் ரக போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுத்துவதாக ரகசிய தகவல். சோதனையில் 70 பிளாஸ்டிக் குப்பிகள் கண்டெடுப்பு; 6 பேர் கைது.


Coimbatore:

கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதைப் பொருள் விற்பனை செய்யும் சம்பவம் இன்று (மே 15) கண்டறியப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்படி, சிறப்பு காவல் படை தொண்டாமுத்தூர் முட்டிப்பாளையம் பகுதியில் சோதனை நடத்தியது. அங்கு 10 கிராம் அளவுள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய 70 பிளாஸ்டிக் குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையின் போது, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஜஹான் இஸ்மாயில் மனைவி ஆஷ்மா கா துன் (40), இத்ரிஷ் அலி மனைவி ஜஹீரா கா துன்(29), எசியாசின் அலி மகன் இத்ரிஷ் அலி(29), அலிஹீசைன் மனைவிகுதிஜா கா துன்(37), மன்சூர் அலி மகன் அலிஹீசைன்(48) மற்றும் ரபிபுல் இஸ்லாம் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



அவர்களிடமிருந்து ரூபாய் 2,10,000 மதிப்புள்ள சுமார் 10 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருட்கள் மற்றும் 1,900 பிளாஸ்டிக் குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...