கோவையில் EHS நடைமுறைகளில் முன்னணி வகிக்கும் கோயம்புத்தூர்

கோவையில் EHS நடைமுறைகளில் சிறப்புடன் முன்னணி வகிக்கும் கோவை, சுகாதாரம், பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்துள்ளது.


Coimbatore: கோயம்புத்தூரில் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (EHS) நடைமுறைகளில் முன்னணியாக உள்ளதாக, இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் தகவல் கூறப்பட்டது. கோவையின் தொழில்நுட்ப முன்னேற்றம், நடைமுறைப்படுத்தல் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளை மேம்படுத்துவதில் EHS முக்கிய பங்கு வகிக்கிறது. ஜி சௌந்தரராஜன், CII பம்ப்ஸ் துணைத் தலைவர், "எம்பவர், எம்ப்ரேஸ், இவால்வ்: EHS-ன் சிறப்பு உயர்த்துதல்” மாநாட்டு கூட்டத்தில் பேசினார்.

கோயம்புத்தூர் ஜவுளி உற்பத்திக்கு மட்டுமல்ல, பொறியியல், தொழில்துறை மற்றும் கல்விக்கும் பெயர் பெற்றது. ஜவுளி ஆலைகள் மற்றும் உற்பத்தி ஆலைகளில் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (EHS) நடைமுறைகளை மேம்படுத்துவதில் கோவை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த முயற்சிகளில் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அடிப்படையிலான நீர் சுத்திகரிப்பு முறைகள், தொழில்சார் சுகாதாரம் மற்றும் அவர்களின் தொழிலாளர்களின் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்,” என்று தனது சிறப்புரையின் போது CII தெற்கு மண்டலத்தின் தலைவர் மற்றும் சந்திரா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெடின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆர் நந்தினி, கூறினார்.

“கோயம்புத்தூரில் உள்ள கல்வி நிறுவனங்கள் எதிர்கால வல்லுநர்களுக்கு கல்வி அளிப்பதில், EHS விழிப்புணர்வு மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

CII-SR EHS Excellence Awards 2023 இன் தலைவர் மற்றும் டான்ஃபோஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் P ரவிச்சந்திரன் தனது வரவேற்பு உரையில், "கோவை நிறுவனங்களில் பல தலைமுறை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இது இந்த நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாகவும் மிகப்பெரிய வாய்ப்பாகவும் உள்ள நிலையில் இவர்களை பணிச்சூழலில் ஒருங்கிணைப்பதில் EHS முக்கிய பங்கு வகிக்கிறது.

"EHS இப்போது வணிகத்தின் மிக முக்கியமான அங்கமாகும். EHS இன் கண்ணுக்கு தெரியாத முக்கிய செயல்திறன் சுட்டிகாட்டிகள்(KPI) நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் இந்த KPIகள் நிறுவனத்தின் கலாச்சாரத்தை வரையறுக்கின்றன.” என்று CII-SR EHS Excellence Awards 2023 இன் இணைத் தலைவர், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் சின், மூத்த துணைத் தலைவர் மற்றும் இயக்குனர் - தொழில்நுட்பம் மற்றும் கொள்முதல், தலைமை தொடர்பு அதிகாரி திரு சுதீப் டால்வி கூறினார்.

இம்மாநாட்டில் EHS-ன் சிறப்பை மேம்படுத்துதல், EHS சிறப்பை நிறுவுதல், EHS சிறப்பை உயர்த்துதல் மற்றும் EHS சிறப்பு விருது விநியோகம் பற்றிய குழு விவாதம் பற்றிய அமர்வுகள் நடைபெற்றன.

சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, ஆற்றல் / கார்பன் தடம், நீர் மேலாண்மை, பணியிட சுகாதாரம், சாலைப் பாதுகாப்பு, EHS கண்டுபிடிப்பு, பணியிடத்தில் EHS பணியாளர் ஈடுபாடு, இதர சிறந்த நடைமுறைகள், EHS இல் பெண்கள், EHS தலைமைத்துவம் ஆகியவற்றில் 208 விருதுகள் அறிவிக்கப்பட்டன.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...