காங்கேயம் அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது - மற்றொருவர் தப்பியோட்டம்

காடையூர் அருகே பசுவன் மூப்பன் வலசில் லோகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து 4 ஆடுகள் திருடிச் சென்ற ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகள் வானம் பார்த்த பூமியாகும். இங்கு விவசாயிகளின் வாழ்வாதாரமே ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வைத்துக்கொண்டு வாழ்வாதாரம் நடத்துவதுதான். இந்த நிலையில் காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழிகளை இரவு நேரங்களில் திருடி செல்வது தொடர்கதையாகவே உள்ளது.

இந்த திருட்டுக்களை கட்டுப்படுத்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களே காவல் துறையினருடன் சேர்ந்து கடந்த சில மாதங்களாக ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சில ஊர்களில் செக் போஸ்ட் அமைத்து சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் நேற்று காங்கேயம் காடையூர் அருகே பசுவன் மூப்பன் வலசில் லோகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து 4 ஆடுகள் திருடிக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் காடையூர் அருகே அடுத்த தோட்டத்தில் திருடுவதற்கு சுமோ காரில் காத்திருந்த போது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சந்தேகித்து சுமோ காரை நோட்டமிட்டுள்ளனர்.

அதில் 4 ஆடுகள், இரண்டு குட்டிகள் இருப்பதை பார்த்துள்ளனர். பின்னர் காரில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் திடீரெனெ இருவரும் காரை விட்டுவிட்டு காட்டுக்குள் தப்பியோடியுள்ளனர். இதில் ஒருவர் தடுக்கி கீழே விழுந்து பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டான்.

பின்னர் அவனையும் திருடுவதற்கு பயன்படுத்திய சுமோ காரையும் காங்கேயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த சதீஷ்குமார் (30) மற்றும் முத்துராமன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஆடுகள் திருடப்பட்ட வழக்குகள் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.இந்த திருட்டு சம்பவத்தில் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஈடுபட்ட இருக்கலாம் எனவும், அவர்களையும் காங்கேயம் காவல்துறையினர் விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...