காங்கேயம் அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது - மற்றொருவர் தப்பியோட்டம்

காடையூர் அருகே பசுவன் மூப்பன் வலசில் லோகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து 4 ஆடுகள் திருடிச் சென்ற ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகள் வானம் பார்த்த பூமியாகும். இங்கு விவசாயிகளின் வாழ்வாதாரமே ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வைத்துக்கொண்டு வாழ்வாதாரம் நடத்துவதுதான். இந்த நிலையில் காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழிகளை இரவு நேரங்களில் திருடி செல்வது தொடர்கதையாகவே உள்ளது.

இந்த திருட்டுக்களை கட்டுப்படுத்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களே காவல் துறையினருடன் சேர்ந்து கடந்த சில மாதங்களாக ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சில ஊர்களில் செக் போஸ்ட் அமைத்து சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் நேற்று காங்கேயம் காடையூர் அருகே பசுவன் மூப்பன் வலசில் லோகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து 4 ஆடுகள் திருடிக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் காடையூர் அருகே அடுத்த தோட்டத்தில் திருடுவதற்கு சுமோ காரில் காத்திருந்த போது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சந்தேகித்து சுமோ காரை நோட்டமிட்டுள்ளனர்.

அதில் 4 ஆடுகள், இரண்டு குட்டிகள் இருப்பதை பார்த்துள்ளனர். பின்னர் காரில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் திடீரெனெ இருவரும் காரை விட்டுவிட்டு காட்டுக்குள் தப்பியோடியுள்ளனர். இதில் ஒருவர் தடுக்கி கீழே விழுந்து பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டான்.

பின்னர் அவனையும் திருடுவதற்கு பயன்படுத்திய சுமோ காரையும் காங்கேயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த சதீஷ்குமார் (30) மற்றும் முத்துராமன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஆடுகள் திருடப்பட்ட வழக்குகள் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.இந்த திருட்டு சம்பவத்தில் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஈடுபட்ட இருக்கலாம் எனவும், அவர்களையும் காங்கேயம் காவல்துறையினர் விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...