உடுமலை கோடந்தூர் மலைவாழ் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் மக்கள்..!

சின்னாறு சோதனை சாவடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும் இது குறித்து பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் அமைந்துள்ளது கோடத்தூர் மலைவாழ் கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலை கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் தற்பொழுது பல வீடுகள் இடிந்து சேதம் அடைந்தும் விரிசல் அடைந்தும் காணப்படுகின்றது.

இதனால் மழை வெயில் காலங்களில் மலைவாழ் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தற்பொழுது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் குடிநீருக்கு பொதுமக்கள் பல கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளது.

மேலும், அவசர தேவைக்கு சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உடுமலை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளதால் கோடந்தூர் மலைவாழ் கிராமத்துக்கு அருகில் உள்ள சின்னாறு சோதனை சாவடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும் இது குறித்து பல ஆண்டுகளாக தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர், அமைச்சர்களிடமும், மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் செய்யப்படவில்லை என மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். எனவே, தமிழக அரசு கோடந்தூர் மலை கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...