உடுமலை கோடந்தூர் மலைவாழ் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் மக்கள்..!

சின்னாறு சோதனை சாவடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும் இது குறித்து பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் அமைந்துள்ளது கோடத்தூர் மலைவாழ் கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலை கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் தற்பொழுது பல வீடுகள் இடிந்து சேதம் அடைந்தும் விரிசல் அடைந்தும் காணப்படுகின்றது.

இதனால் மழை வெயில் காலங்களில் மலைவாழ் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தற்பொழுது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் குடிநீருக்கு பொதுமக்கள் பல கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளது.

மேலும், அவசர தேவைக்கு சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உடுமலை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளதால் கோடந்தூர் மலைவாழ் கிராமத்துக்கு அருகில் உள்ள சின்னாறு சோதனை சாவடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும் இது குறித்து பல ஆண்டுகளாக தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர், அமைச்சர்களிடமும், மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் செய்யப்படவில்லை என மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். எனவே, தமிழக அரசு கோடந்தூர் மலை கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...