பத்தாம் வகுப்பு தேர்வில் உடுமலை மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் - பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு

ஆர்.கே.ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி மாணவி யுகாஷினி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடமும், திருப்பூர் மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.கே.ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பயிலும் யுகாஷினி என்ற மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடமும், திருப்பூர் மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.



இந்த நிலையில், இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவி யுகாசினிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



பின்னர் பள்ளியின், தாளாளரும் நல்லாசிரியர் விருது பெற்றவருமான ஆர்.கே. ராமசாமி மாணவிக்கு இனிப்புகள் வழங்கி,



இதே போல பன்னிரண்டாம் வகுப்பு தேர்விலும் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளேன். என் வெற்றிக்கு காரணம் தாய் மற்றும் ஆசிரியர்கள் ஊக்குவிப்பு தான். பள்ளியில் அதிகமான மாதிரி தேர்வுகள் வைத்து ஆசிரியர்கள் என்னை உற்சாகம் ஊட்டினர். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தாய், பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

பள்ளியின் தாளாளர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, தற்பொழுது மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற யுகாஷனி ஆர்.கே.ஆர். குரு வித்யா பள்ளியில் எல்.கே.ஜி முதல் படித்து வருகிறார். தற்சமயம் அயராது படித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் இந்த வெற்றிக்கு காரணமான பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்று வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் பள்ளியின் செயலர் கார்த்திக் குமார், முதல்வர்கள் மாலா மற்றும் மஞ்சுளா தேவி, செல்வகுமார், பெற்றோர், ஆசிரியர், கழக நிர்வாகிகள் மற்றும் உடுமலை நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பாரட்டி வாழ்த்து தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவி நேற்று வெளியூரில் இருந்த காரணத்தால் இன்று பள்ளிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...