பத்தாம் வகுப்பு தேர்வில் உடுமலை மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் - பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு

ஆர்.கே.ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி மாணவி யுகாஷினி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடமும், திருப்பூர் மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.கே.ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பயிலும் யுகாஷினி என்ற மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடமும், திருப்பூர் மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.



இந்த நிலையில், இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவி யுகாசினிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



பின்னர் பள்ளியின், தாளாளரும் நல்லாசிரியர் விருது பெற்றவருமான ஆர்.கே. ராமசாமி மாணவிக்கு இனிப்புகள் வழங்கி,



இதே போல பன்னிரண்டாம் வகுப்பு தேர்விலும் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளேன். என் வெற்றிக்கு காரணம் தாய் மற்றும் ஆசிரியர்கள் ஊக்குவிப்பு தான். பள்ளியில் அதிகமான மாதிரி தேர்வுகள் வைத்து ஆசிரியர்கள் என்னை உற்சாகம் ஊட்டினர். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தாய், பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

பள்ளியின் தாளாளர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, தற்பொழுது மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற யுகாஷனி ஆர்.கே.ஆர். குரு வித்யா பள்ளியில் எல்.கே.ஜி முதல் படித்து வருகிறார். தற்சமயம் அயராது படித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் இந்த வெற்றிக்கு காரணமான பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்று வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் பள்ளியின் செயலர் கார்த்திக் குமார், முதல்வர்கள் மாலா மற்றும் மஞ்சுளா தேவி, செல்வகுமார், பெற்றோர், ஆசிரியர், கழக நிர்வாகிகள் மற்றும் உடுமலை நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பாரட்டி வாழ்த்து தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவி நேற்று வெளியூரில் இருந்த காரணத்தால் இன்று பள்ளிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...