போக்குவரத்துக்கு இடையூறில்லா பேருந்து நிறுத்தம் : கோவை மாநகர போக்குவரத்து போலீசாரின் புதிய முயற்சி

வீட்டில் இருந்து புறப்பட்டும் வாகன ஓட்டிகள், செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைவதற்குள் கோவை மாநகரின் ‘டிராபிக்’-களுக்குள் சிக்கித்தவிப்பது வாடிக்கையாகிவிட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக மாறிவரும் கோவையில் நெருக்கடிகளை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன்படி, ‘பஸ்-பே’ என்ற திட்டத்தை போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். மாநகர பேருந்துகள் ஆங்காங்கே உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் போது பின்னால் வரும் வாகனங்கள் சாலைகளில் தேங்கி நிற்பதை தவிர்க்கவும், மற்ற வாகனங்களுக்கு இடையூறில்லாமல் பேருந்துகள் நிற்க வழிவகை செய்வதுமே இந்த ‘பஸ்-பே’ திட்டத்தின் நோக்கம்.

இது குறித்து கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் சிம்ப்ளி சிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதவாது :- 

கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன் முதல் படியாக அவினாசி சாலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘க்ரீன் காரிடார்’ திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

வாகன ஓட்டிகள் அவினாசி சாலையில் 40 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்போது சாலைகளில் உள்ள சிக்னல்களில் மாட்டிக்கொள்ளாமல் பயணிகப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் ‘க்ரீன் காரிடார்’. தற்போது தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களோடு, காவல் துறை இணைந்து இத்திட்டத்தை மேம்படுத்தி வருகிறோம். 



பஸ்-பே

பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படும் பேருந்துகள் பெரும்பாலும் சாலையோரம் நிற்பதில்லை. பயணிகள் நிழற்குடையின் கீழ் நிற்காமல் சாலைகளில் நிற்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு பேருந்துகள் சாலையோரம் நிறுத்தாமல் வழித்தடத்தில் நிறுத்தப்படுவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், சிக்னல்களை தொடர்ந்து, வரும் பேருந்து நிறுத்தங்களால் அதிகமான போக்குவரத்து நெரிசலை வாகன ஓட்டிகள் சந்திக்க வேண்டியுள்ளது. 

அதனால், பேருந்துகள் நிற்க சாலையோரம் ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. இரவு நேரங்களிலும் பேருந்து சரியான இடத்தில் வந்து நிற்க, பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு சுவர்களில் மின்னும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும். இதுவே இந்த ‘பஸ்-பே’ திட்டம். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள 10 இடங்களை தேர்வு செய்தோம். அவினாசி சாலையில் லட்சுமி மில்ஸ் சந்திப்பு, மேட்டுப்பாளையம் சாலையில் சிந்தாமணி சந்திப்பு மற்றும் எம்.ஜி.ஆர். மார்க்கெட், சிவாலயா சந்திப்பு, சுந்தராபுரம், கோவைப்புதூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட 8  இடங்களில் ‘பஸ்-பே’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பை தொடர்ந்து மேலும் பல இடங்களில் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படும். 

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவிக்கலாம். அவ்வாறு பொதுமக்கள் கொடுக்கும் நல்ல ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டு, இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...