கோவை மாவட்டத்தில் வன விலங்குகளின் தாகம் தணிக்க நீர் நிரப்பும் பணி

கோவை மாவட்டத்தில் கடும் வெயிலில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க வனத்துறையினர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி மே 10 அன்று ஆரம்பித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் மழை வரும் என எதிர்பார்த்தனர். கடந்த இரண்டு நாட்களாக கோவை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இருந்த போதிலும், கோடை வெயிலால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் அபாயம் நிலவியது.



இந்த நிலையில் வனத்துறையினர் தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் மே 10 அன்று வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று அந்தத் தொட்டியில் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வனவிலங்குகளின் தாகம் தணியும். மேலும், கோடை மழை மேலும் சில நாட்களுக்கு நீடித்தால் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...