கோவை மாவட்டத்தில் வன விலங்குகளின் தாகம் தணிக்க நீர் நிரப்பும் பணி

கோவை மாவட்டத்தில் கடும் வெயிலில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க வனத்துறையினர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி மே 10 அன்று ஆரம்பித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் மழை வரும் என எதிர்பார்த்தனர். கடந்த இரண்டு நாட்களாக கோவை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இருந்த போதிலும், கோடை வெயிலால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் அபாயம் நிலவியது.



இந்த நிலையில் வனத்துறையினர் தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் மே 10 அன்று வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று அந்தத் தொட்டியில் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வனவிலங்குகளின் தாகம் தணியும். மேலும், கோடை மழை மேலும் சில நாட்களுக்கு நீடித்தால் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...