கோவை மாவட்டத்தில் வன விலங்குகளின் தாகம் தணிக்க நீர் நிரப்பும் பணி

கோவை மாவட்டத்தில் கடும் வெயிலில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க வனத்துறையினர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி மே 10 அன்று ஆரம்பித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் மழை வரும் என எதிர்பார்த்தனர். கடந்த இரண்டு நாட்களாக கோவை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இருந்த போதிலும், கோடை வெயிலால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் அபாயம் நிலவியது.



இந்த நிலையில் வனத்துறையினர் தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் மே 10 அன்று வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று அந்தத் தொட்டியில் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வனவிலங்குகளின் தாகம் தணியும். மேலும், கோடை மழை மேலும் சில நாட்களுக்கு நீடித்தால் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...