கோவையில் 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்புக்கு வரும் 11ம் தேதி நேர்முகத் தேர்வு

மருத்துவ உதவியாளர் பணிக்கு 19-30 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம்., டி.எம்.எல்.டி., ஏ.என்.எம்., அல்லது லைப்சயின்ஸ் படிப்புகள் படித்திருக்க வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சாய்பாபா கோவில், மெக்ரிகர் சாலை மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 108 ஆம்புலன்சில் அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கு வரும் 11ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.

அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடத்திற்கு வரும் 11ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை முதல்கட்ட நேர்முகத் தேர்வு நடக்கிறது.

மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., டி.எம்.எல்.டி., ஏ.என்.எம்., அல்லது லைப்சயின்ஸ் படிப்புகள் படித்திருக்க வேண்டும். மாத 20 ரூபாய் வழங்கப்படும். அதேபோல், டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 24 - 35 வயதிற்குள்ளும், 162.5 செ.மீ., உயரத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முழுமை பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவள நேர் ஊதியமாக 16 ஆயிரத்து காணல், சாலை விதிகள் தொடர்பான தேர்வு, கண் பார்வை திறன் சோதிக்கும் தேர்வு நடத்தப்படும். மாத ஊதியமாக 15 ஆயிரத்து 820 ரூபாய் வழங்கப்படும்.

நேர்முக தேர்வுக்கு வருவோர் அசல் மற்றும் நகல் கல்வித் தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம், முகவரி மற்றும் அடையாள சான்றுகளை எடுத்து வரவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...