செண்டுமல்லி வளர்ப்பின் மூலம் நூற்புழுக்கள் குறைந்து மகசூல் அதிகரிக்கும் என வேளாண்மைப் பல்கலை தகவல்

நூற்புழுக்களின் தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடையே குறைவாக உள்ளது.  ஒரே வகையான காய்கறிப் பயிரினையோ அல்லது மற்ற பயிரையோ தொடர்ச்சியாக பயிரிடுவதன் மூலம் இத்தகைய நூற்புழுக்கள் மண்ணில் தங்கி இனத்தை பெருக்கி அடுத்தடுத்து பயிர் செய்யும்போது அதிக அளவில் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.



காய்கறிப் பயிர்களில் பட்டம் இல்லா நேரத்தில் பயிர்சுழற்சி முறையில் செண்டுமல்லியை பயிரிடுவதன் மூலம் நூற்புழுக்களை நன்றாக கட்டுப்படுத்த முடியும். செண்டுமல்லி வேரிலிருந்து ஆல்பா-டெரிதினைல் என்ற வேதிப்பொருள் சுரக்கிறது.

இவ்வேதிப்பொருள் மண்ணில் நூற்புழுக்கள், பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒருசில பூச்சிகளை கொல்லும் உயிர் கொல்லி பண்பினை கொண்டது. இந்த ஆல்பா-டெரிதினைல் மண்ணில் உள்ள நூற்புழுக்கள் மற்றும் மண்ணில் உள்ள உயிர்கொல்லிகளின் முட்டைகளின் மீது வேதியியல் பாதிப்பினை ஏற்படுத்தி முட்டை பொறிக்கும் திறனை பெருமளவு குறைக்கிறது.

இதனால் இவ்வுயிர் கொல்லிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு மண்ணில் உள்ள இவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்படுகிறது. செண்டுமல்லி உயிருள்ள பயிரின் வேரிலிருந்தே ஆல்பா-டெரிதினைல் சுரக்கிறது. ஆதலால் பயிர் சுழற்சி முறையில் காய்கறிப்பயிர்களுடன் செண்டுமல்லியை ஊடுபயிராக குறுகிய காலத்திற்கு (2-3 மாதம்) பயிரிடுவதால் நூற்புழு கட்டுப்பாட்டில் நல்ல பலனை பெறமுடியும்.  

எனவே காய்கறிப்பயிர்களுடன் செண்டுமல்லியை பயிர் சுழற்சி செய்து பின்பு கோடை உழவு செய்தல் மூலம் “வருமுன் காப்போம்” என்ற பழமொழிக்கு ஏற்ப காய்கறிப்பயிர்களால் நூற்புழுக்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறமுடியும் என கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக நூற்புழுவியல் துறை ச.சுப்ரமணியன் மற்றும் கி.பூர்ணிமா தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...