இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தியும், பல்கலைக்கழகங்களில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் பதாகைகளை ஏந்தியபடி கோவை BSNL அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: இஸ்ரேல் பாலஸ்தீன போரில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் உள்ள மாணவர்கள் போராடி வருகின்றனர்.



குறிப்பாக கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்ட்வார்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் போராடக்கூடிய மாணவர்கள் மீது அமெரிக்க காவல்துறை கொடூரமாக தாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இந்த போராட்டத்தில் போராடக்கூடிய மாணவர்களுக்கு ஆதரவாகவும், உடனடியாக இஸ்ரேல் பாலஸ்தீன போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து மாநில முழுவதும் SFI அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை BSNL அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இஸ்ரேல் பாலத்தீன போரை நிறுத்த வலியுறுத்தியும், பல்கலைக்கழகங்களில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...