இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தியும், பல்கலைக்கழகங்களில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் பதாகைகளை ஏந்தியபடி கோவை BSNL அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: இஸ்ரேல் பாலஸ்தீன போரில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் உள்ள மாணவர்கள் போராடி வருகின்றனர்.



குறிப்பாக கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்ட்வார்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் போராடக்கூடிய மாணவர்கள் மீது அமெரிக்க காவல்துறை கொடூரமாக தாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இந்த போராட்டத்தில் போராடக்கூடிய மாணவர்களுக்கு ஆதரவாகவும், உடனடியாக இஸ்ரேல் பாலஸ்தீன போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து மாநில முழுவதும் SFI அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை BSNL அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இஸ்ரேல் பாலத்தீன போரை நிறுத்த வலியுறுத்தியும், பல்கலைக்கழகங்களில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...