உக்கடம், புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்பில் வசிக்கும் மக்களை பாதுகாக்க கோரி ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு

நான்காண்டுகளாகியும் பணிகள் முடிவடையாததால் மக்கள் நீண்ட காலங்களாக தகர குடியிருப்பிலேயே வசிக்கின்ற நிலமை உள்ளதாகவும், கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி ஆகியவை இல்லை எனவும் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்தனர்.


கோவை: கோவை உக்கடம் தெற்கு பகுதியில் வசிக்கின்ற மக்களை மேம்பால பணிகளுக்காக மாநகராட்சி நிர்வாகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்புகளை தகரத்தில் அமைத்து கொடுத்து வசிக்கச் செய்தது.



அதேபோல் வெரைட்டி ஹால் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும் மறுசீரமைப்பதற்காக அங்கு வசிக்கும் மக்களையும், அப்புறப்படுத்தி அருகில் இருந்த விளையாட்டு மைதானத்தில் தகரத்தில் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து மாநகராட்சி நிர்வாகம் வசிக்க செய்தனர்.



இந்த இரண்டு பகுதி மக்களும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் நான்காண்டுகளாகியும் அப்பணிகள் முடிவடையாததால் மக்கள் நீண்ட காலங்களாக இந்த தகர குடியிருப்பிலேயே வசிக்கின்ற நிலமை நீடித்து வருவதாகவும், இங்கு கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி ஆகியவை இல்லை எனவும், மின்சார வசதி அடிக்கடி தடைப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தமிழ் புலிகள் கட்சியினர் தற்பொழுது கோடை வெயில் வாட்டி வருவதால் அம்மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் வசதிகளை ஏற்படுத்தி தருமாறும், அதே சமயம் அவர்களுக்கான குடியிருப்புகளை விரைந்து முடித்து ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த மனுவானது தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் இளவேனில் தலைமையில் அளிக்கப்பட்டது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...