உக்கடம், புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்பில் வசிக்கும் மக்களை பாதுகாக்க கோரி ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு

நான்காண்டுகளாகியும் பணிகள் முடிவடையாததால் மக்கள் நீண்ட காலங்களாக தகர குடியிருப்பிலேயே வசிக்கின்ற நிலமை உள்ளதாகவும், கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி ஆகியவை இல்லை எனவும் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்தனர்.


கோவை: கோவை உக்கடம் தெற்கு பகுதியில் வசிக்கின்ற மக்களை மேம்பால பணிகளுக்காக மாநகராட்சி நிர்வாகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்புகளை தகரத்தில் அமைத்து கொடுத்து வசிக்கச் செய்தது.



அதேபோல் வெரைட்டி ஹால் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும் மறுசீரமைப்பதற்காக அங்கு வசிக்கும் மக்களையும், அப்புறப்படுத்தி அருகில் இருந்த விளையாட்டு மைதானத்தில் தகரத்தில் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து மாநகராட்சி நிர்வாகம் வசிக்க செய்தனர்.



இந்த இரண்டு பகுதி மக்களும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் நான்காண்டுகளாகியும் அப்பணிகள் முடிவடையாததால் மக்கள் நீண்ட காலங்களாக இந்த தகர குடியிருப்பிலேயே வசிக்கின்ற நிலமை நீடித்து வருவதாகவும், இங்கு கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி ஆகியவை இல்லை எனவும், மின்சார வசதி அடிக்கடி தடைப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தமிழ் புலிகள் கட்சியினர் தற்பொழுது கோடை வெயில் வாட்டி வருவதால் அம்மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் வசதிகளை ஏற்படுத்தி தருமாறும், அதே சமயம் அவர்களுக்கான குடியிருப்புகளை விரைந்து முடித்து ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த மனுவானது தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் இளவேனில் தலைமையில் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...