உக்கடம், புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்பில் வசிக்கும் மக்களை பாதுகாக்க கோரி ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு

நான்காண்டுகளாகியும் பணிகள் முடிவடையாததால் மக்கள் நீண்ட காலங்களாக தகர குடியிருப்பிலேயே வசிக்கின்ற நிலமை உள்ளதாகவும், கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி ஆகியவை இல்லை எனவும் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்தனர்.


கோவை: கோவை உக்கடம் தெற்கு பகுதியில் வசிக்கின்ற மக்களை மேம்பால பணிகளுக்காக மாநகராட்சி நிர்வாகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்புகளை தகரத்தில் அமைத்து கொடுத்து வசிக்கச் செய்தது.



அதேபோல் வெரைட்டி ஹால் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும் மறுசீரமைப்பதற்காக அங்கு வசிக்கும் மக்களையும், அப்புறப்படுத்தி அருகில் இருந்த விளையாட்டு மைதானத்தில் தகரத்தில் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து மாநகராட்சி நிர்வாகம் வசிக்க செய்தனர்.



இந்த இரண்டு பகுதி மக்களும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் நான்காண்டுகளாகியும் அப்பணிகள் முடிவடையாததால் மக்கள் நீண்ட காலங்களாக இந்த தகர குடியிருப்பிலேயே வசிக்கின்ற நிலமை நீடித்து வருவதாகவும், இங்கு கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி ஆகியவை இல்லை எனவும், மின்சார வசதி அடிக்கடி தடைப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தமிழ் புலிகள் கட்சியினர் தற்பொழுது கோடை வெயில் வாட்டி வருவதால் அம்மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் வசதிகளை ஏற்படுத்தி தருமாறும், அதே சமயம் அவர்களுக்கான குடியிருப்புகளை விரைந்து முடித்து ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த மனுவானது தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் இளவேனில் தலைமையில் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...