தாராபுரத்தில் போக்குவரத்தை சரி செய்த பெண் – வேடிக்கை பார்த்தப்படி சென்ற மக்கள்

கணவன் உடன் சண்டைப்போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி, பொள்ளாச்சி சாலை அமராவதி ரவுண்டானா அருகே போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் உள்ள பொள்ளாச்சி சாலை அமராவதி ரவுண்டானா அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையில் நின்று கொண்டு வரும் வாகனங்களுக்கு இடையூறு இன்றி வாகன ஒட்டிகளுக்கு வாகனங்களை வழிமறித்து போக்குவரத்துக் காவலர் செய்யும் வேலைகளை அனைத்தும் செய்து வாகனங்களை அனுப்பி வைத்தார்.

அதுமட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்களுக்கு சல்யூட் அடித்து வாகன ஓட்டிகளை வரவேற்றார். தாராபுரம் மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் உதவியுடன் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்ணை தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.



விசாரணையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோதிகா வயது 25 என்பது தெரிய வந்தது. இந்தப் பெண்ணுக்கு திருமணமான நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இதுபோன்று சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் இன்று காலையில் பழனியில் இருந்து தாராபுரத்திற்கு வந்து இதுபோன்று அட்ராசிட்டியில் ஈடுபட்டது தெரியவந்தது. தாராபுரம் பேருந்து நிலையம் மற்றும் அமராவதி சிலை பகுதியில் பொதுமக்கள் நீண்ட நேரம் அப்பெண் செய்யும் செயல்களை வேடிக்கை பார்த்து ரசித்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...