கோவை ஆர்.எஸ்.புரம் அருகே செல்போன் டவரில் இருந்து விழுந்து ஊழியர் பலி - ஒப்பந்ததாரர் மீது வழக்கு

ஆர்.எஸ்.புரம் சர்.சி.வி ரோடு ஜங்ஷனில் உள்ள செல்போன் டவரில் ஏறி பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்த ஊழியர், திடீரென நிலைதடுமாறி 15 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர் கோவையில் தங்கியிருந்து செல்போன் டவர் பராமரிப்பு பணி ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று (மே.2) கார்த்திக் ஆர்.எஸ்.புரம் சர்.சி.வி ரோடு ஜங்ஷனில் உள்ள செல்போன் டவரில் ஏறி பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி 15 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.



இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கார்த்திக்கை பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக செல்போன் டவர் ஒப்பந்ததாரர் வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த வேலுசாமி (60) என்பவர் மீது போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஊழியரை பணிக்கு அமர்த்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...