கோவை மாநகர் காவலர்களுக்கான 2 நிமிடம் ஓட்டம் மற்றும் 10 நிமிடம் தியானம் தொடக்கம்

கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 40 ஆண் காவலர்கள், 20 பெண் காவலர்கள் என மொத்தமாக 60 பேர் கலந்து கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பின்னர், 10 நிமிடங்கள் தியானம் செய்தனர்.


கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் உடல் நலனையும், மனநலனையும் மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது அது அவர்களுக்கு ஒரு பழக்கமாக மாறிவிடும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

அதன்படி 48 நாட்களுக்கு கோவை மாநகர் காவலர்களுக்கான 2 நிமிடம் ஓட்டம் மற்றும் 10 நிமிடம் தியானம் ஆகியவற்றை இன்று முதல் தொடங்கியது.



இதில் கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 40 ஆண் காவலர்கள், 20 பெண் காவலர்கள் என மொத்தமாக 60 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பின்னர், 10 நிமிடங்கள் தியானம் செய்தனர்.



மேற்படி பயிற்சியானது இன்று முதல் தொடர்ச்சியாக 48 நாட்கள் நடைபெறவுள்ளது.



மேற்படி 2 கி.மீ ஓட்டமானது கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் துவங்கி டாக்டர் பாலசுந்தரம் ரோடு, பெண்கள் தொழில்நுட்ப கல்லூரி சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, அவிநாசி ரோடு வழியாக சென்று மீண்டும் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நிறைவுடைந்தது.

கோவை மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகர், மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயவேல், மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கிட்டு மற்றும் இருபால காவல் ஆளிநர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...