கோவை மாநகர் காவலர்களுக்கான 2 நிமிடம் ஓட்டம் மற்றும் 10 நிமிடம் தியானம் தொடக்கம்

கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 40 ஆண் காவலர்கள், 20 பெண் காவலர்கள் என மொத்தமாக 60 பேர் கலந்து கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பின்னர், 10 நிமிடங்கள் தியானம் செய்தனர்.


கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் உடல் நலனையும், மனநலனையும் மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது அது அவர்களுக்கு ஒரு பழக்கமாக மாறிவிடும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

அதன்படி 48 நாட்களுக்கு கோவை மாநகர் காவலர்களுக்கான 2 நிமிடம் ஓட்டம் மற்றும் 10 நிமிடம் தியானம் ஆகியவற்றை இன்று முதல் தொடங்கியது.



இதில் கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 40 ஆண் காவலர்கள், 20 பெண் காவலர்கள் என மொத்தமாக 60 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பின்னர், 10 நிமிடங்கள் தியானம் செய்தனர்.



மேற்படி பயிற்சியானது இன்று முதல் தொடர்ச்சியாக 48 நாட்கள் நடைபெறவுள்ளது.



மேற்படி 2 கி.மீ ஓட்டமானது கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் துவங்கி டாக்டர் பாலசுந்தரம் ரோடு, பெண்கள் தொழில்நுட்ப கல்லூரி சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, அவிநாசி ரோடு வழியாக சென்று மீண்டும் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நிறைவுடைந்தது.

கோவை மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகர், மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயவேல், மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கிட்டு மற்றும் இருபால காவல் ஆளிநர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...