மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் பேச்சுவார்த்தை - போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜடையம்பாளையம் ஊராட்சி மக்கள்

சீரான குடிநீர் கேட்டு இரண்டாவது நாளாக மேட்டுப்பாளையம் - சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.


கோவை: மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, காரமடை, ஜடையம்பாளையம் ஊராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து ஆலங்கொம்பு பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் நேற்று (ஏப்ரல்.29) காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



பின்னர் தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் ஊராட்சி தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் சுமூக முடிவு எட்டியதையடுத்து கலைந்து சென்றனர்.



இந்த நிலையில் நேற்று போலீசார், வருவாய்த்துறையினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய பலனளிக்காததால் இன்று (ஏப்ரல்.30) காலை இரண்டாவது நாளாக அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.



இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மேட்டுப்பாளையம் - சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர், போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...