பொள்ளாச்சி அருகே இரண்டு இடங்களில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியும், சமாதானம் ஆகாத பெண்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் வரை சாலை மறியல் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சுந்தரகவுண்டனூர் மற்றும் மரம்பிடுங்கி கவுண்டனூர் ஆகிய கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.



இந்த இரண்டு கிராமங்களுக்கும் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் விநியோகம் சரி வர கொடுக்கவில்லை எனவும், கடந்த 30 நாட்களாக முழுவதுமாக குடிநீர் வராததால் குடிப்பதற்கும் மற்றும் கால்நடைகளுக்கும் குடிநீர் இல்லாததால் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள் சுந்தரகவுண்டனூர் மற்றும் மரபிடுங்கி கவுண்டனூர் ஆகிய கிராமத்தை பெண்கள் பொள்ளாச்சி தாராபுரம் பிரதான சாலையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதனால் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகாமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் வரை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் செல்ல திருப்பிவிடபட்டது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...