பொள்ளாச்சி அருகே இரண்டு இடங்களில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியும், சமாதானம் ஆகாத பெண்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் வரை சாலை மறியல் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சுந்தரகவுண்டனூர் மற்றும் மரம்பிடுங்கி கவுண்டனூர் ஆகிய கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.



இந்த இரண்டு கிராமங்களுக்கும் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் விநியோகம் சரி வர கொடுக்கவில்லை எனவும், கடந்த 30 நாட்களாக முழுவதுமாக குடிநீர் வராததால் குடிப்பதற்கும் மற்றும் கால்நடைகளுக்கும் குடிநீர் இல்லாததால் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள் சுந்தரகவுண்டனூர் மற்றும் மரபிடுங்கி கவுண்டனூர் ஆகிய கிராமத்தை பெண்கள் பொள்ளாச்சி தாராபுரம் பிரதான சாலையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதனால் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகாமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் வரை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் செல்ல திருப்பிவிடபட்டது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...