பொள்ளாச்சி அருகே இரண்டு இடங்களில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியும், சமாதானம் ஆகாத பெண்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் வரை சாலை மறியல் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சுந்தரகவுண்டனூர் மற்றும் மரம்பிடுங்கி கவுண்டனூர் ஆகிய கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.



இந்த இரண்டு கிராமங்களுக்கும் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் விநியோகம் சரி வர கொடுக்கவில்லை எனவும், கடந்த 30 நாட்களாக முழுவதுமாக குடிநீர் வராததால் குடிப்பதற்கும் மற்றும் கால்நடைகளுக்கும் குடிநீர் இல்லாததால் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள் சுந்தரகவுண்டனூர் மற்றும் மரபிடுங்கி கவுண்டனூர் ஆகிய கிராமத்தை பெண்கள் பொள்ளாச்சி தாராபுரம் பிரதான சாலையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதனால் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகாமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் வரை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் செல்ல திருப்பிவிடபட்டது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...