ட்ரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பது பற்றி வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு

ட்ரோன்களை கஸ்டமைஸ் செய்து தண்ணீரின் அளவை கண்காணிப்பதற்கும், பயிரின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் கூட பயன்படுத்த முடியும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாணவர்கள் 9 பேர் கொண்ட குழு, ஸ்ரீராமலிங்கம் தலைமையில் தாராபுரம் ஒன்றியம் சத்திரம் கிராமத்தில் வேளாண்மை அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டனர். காவேரி அக்ரோ சர்வீசஸ், சத்திரம்‌, உதவியுடன் கோட்டமுத்தாம்பாளையம் கிராமத்தில் மாணவர்கள் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதற்கு மட்டுமின்றி, தண்ணீர் பாய்ச்ச மற்றும் விதைகளைப் பரப்ப என்று பல்வேறு காரணங்களுக்கு இப்போது ட்ரோன்கள் விவசாயத்தில் பயன்படுகின்றன. மேலும், இந்த ட்ரோன்களை கஸ்டமைஸ் (Customise) செய்து தண்ணீரின் அளவை கண்காணிப்பதற்கும், பயிரின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் கூட பயன்படுத்த முடியும்.‌



இன்றைய காலகட்டத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை குறித்த நேரத்தில் மருந்து தெளிக்க முடியாத நிலையை இந்த ட்ரோன் தொழில்நுட்பம் நீக்குகிறது. இந்த விழிப்புணர்வின் மூலம் கிராமத்து விவசாயிகள் பயனடைந்தனர்.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...