கோவை நகருக்குள் புகுந்த அரிய உயிரினமான தேவாங்கு : வன உயிரின பாதுகாப்பு குழு உதவியுடன் மீட்பு..!

கோவை உக்கடம் பகுதியில் தேவாங்கு ஒன்று இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில், பசுமை பாதுகாப்பு அமைப்பினர் அதை பத்திரமாக மீட்டு மதுக்கரை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை: கோவை, உக்கடம் பகுதியில் தேவாங்கு ஒன்று புகுந்து இருப்பதாகபசுமை பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அங்கு சென்ற பசுமை அமைப்பைச் சேர்ந்த சிநேக் அமீன், அந்த தேவாங்கை பத்திரமாக மீட்டு, மதுக்கரை வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த வனத் துறையினரிடம், மீட்கப்பட்ட தேவாங்கு பத்திரமாகஒப்படைக்கப்பட்டது. 

இது குறித்து பசுமை பாதுகாப்பு இயக்கத்தினர் கூறும்போது:-

தேவாங்கு என்பது இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி விலங்காகும். பெரும்பாலும் அடர் வனப்பகுதிகளில் மர கிளைகள் இடையே இவைகள் வாழும். 

கோவை மாவட்ட வன எல்லையான மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான பாலக்காடு,மதுக்கரை போன்ற பகுதிகளில் இந்த அறிய வகை உயிரினம் காணப்படும்.தேவாங்குகளின் கண்களைச்சுற்றியுள்ள வட்ட வளையம் அவற்றைத் தனித்து அடையாளம் காண உதவுகிறது.

தற்போது, வனப்பகுதிகளில்கடும் வறட்சி நிலவுவதால்,உணவு, தண்ணீர் தேடி நகரத்துக்குள் வந்து இருக்கலாம். 

மெல்ல நகரும்.தன்மை கொண்டை இவவிளங்கு,

நாய், பூனை போன்றவற்றின் கண்களில் இருந்து தப்பித்து, நகரப் பகுதிக்குள் பத்திரமாக இருந்தது ஆச்சரியமாக உள்ளது. 

இதுபோன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வரும்பொழுது, பொதுமக்கள் அவற்றை அச்சுறுத்தாமல் வனத்துறை அல்லது வன ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) மதிப்பீட்டின்படி அச்சப்படும் அளவு எண்ணிக்கையில் உள்ள (Near Threatened) உயிரினமாக மெலிந்த தேவாங்குகள் உள்ளன. இந்திய காட்டுயிர்கள் பாதுகாப்பு சட்டம் – 1972 , பட்டியல் -1இல் இவ்விலங்கு உள்ளது. அழியும் நிலையில் உள்ள உயிரினங்களே இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...