கோடை விடுமுறை காலத்தில் கோவை - பரௌனி இடையே சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையையொட்டி கோவை - பரௌனி இடையே சிறப்பு ரயில் சேவைகள் ஏப்ரல் 23 முதல் ஜூன் 28 வரை இயங்கும். இந்த ரயில் பல முக்கிய நிலையங்களில் நிற்கும்.


கோவை: சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் கோடை விடுமுறையொட்டி ஏப்ரல் 20 அன்று அறிவித்துள்ளபடி, கோவை மற்றும் பரௌனி இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. ஏப்ரல் 23 முதல் ஜூன் 25 வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கோவையில் இருந்து காலை 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06059) வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு பரௌனி நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, பரௌனி நிலையத்தில் இருந்து ஏப்ரல் 26 முதல் ஜூன் 28 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் பரௌனி - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06060) திங்கள்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, பாா்வதிபுரம், ராயகடை, முனிகுடா, சம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, தன்பாத், சித்தரஞ்சன், மதுப்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்றும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...