கோடந்தூர் பகுதியில் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி மையத்தில் மலைவாழ் மக்கள் வாக்களிப்பு

தேர்தல் சமயத்தில் மட்டும் வரும் அரசியல் பிரமுகர்கள், பழமையான வீடுகளை புதுப்பித்து தருகிறோம், புதிய வீடுகள் கட்டித் தருகிறோம், அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம் என வாக்குறுதி தந்துவிட்டு தேர்தல் முடிந்ததும் கண்டுகொள்வதில்லை என மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கோடந்தூர், ஆட்டுமலை, பொற்பார்க்குடி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு கோடந்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சாவடி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் மலைவாழ் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தனர்.



பின்னர் மலைவாழ் மக்கள் கூறும் பொழுது, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகவே கோடந்தூர் மலை கிராமத்தில் வசித்து வருகின்றோம். தேர்தல் சமயத்தில் அரசியல் பிரமுகர்கள் நேரில் வருகை புரிந்து பழமையான வீடுகள் புதுப்பித்து தருகிறோம். புதிய வீடுகள் கட்டித் தருகிறோம். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம் என வாக்குறுதிகள் தந்துவிட்டு செல்கின்றனர்.

ஆனால் தேர்தல் முடிந்ததும் எதுவும் செய்து தரப்படுவதில்லை. இருப்பினும் மலைவாழ் மக்கள் ஆகிய நாங்கள் இன்று எங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளோம் என்று தெரிவித்தனர். எனவே இனிவரும் காலங்களில் கோடந்தூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் மலை வாழ் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...