கோடந்தூர் பகுதியில் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி மையத்தில் மலைவாழ் மக்கள் வாக்களிப்பு

தேர்தல் சமயத்தில் மட்டும் வரும் அரசியல் பிரமுகர்கள், பழமையான வீடுகளை புதுப்பித்து தருகிறோம், புதிய வீடுகள் கட்டித் தருகிறோம், அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம் என வாக்குறுதி தந்துவிட்டு தேர்தல் முடிந்ததும் கண்டுகொள்வதில்லை என மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கோடந்தூர், ஆட்டுமலை, பொற்பார்க்குடி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு கோடந்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சாவடி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் மலைவாழ் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தனர்.



பின்னர் மலைவாழ் மக்கள் கூறும் பொழுது, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகவே கோடந்தூர் மலை கிராமத்தில் வசித்து வருகின்றோம். தேர்தல் சமயத்தில் அரசியல் பிரமுகர்கள் நேரில் வருகை புரிந்து பழமையான வீடுகள் புதுப்பித்து தருகிறோம். புதிய வீடுகள் கட்டித் தருகிறோம். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம் என வாக்குறுதிகள் தந்துவிட்டு செல்கின்றனர்.

ஆனால் தேர்தல் முடிந்ததும் எதுவும் செய்து தரப்படுவதில்லை. இருப்பினும் மலைவாழ் மக்கள் ஆகிய நாங்கள் இன்று எங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளோம் என்று தெரிவித்தனர். எனவே இனிவரும் காலங்களில் கோடந்தூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் மலை வாழ் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...