பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப் பதிவு - முதல் முறை வாக்காளர்களுக்கு மரக்கன்று வழங்கி ஊக்குவிப்பு..!

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் 1,715 வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வெயில் காரணமாக காலையிலேயே,  வந்து வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி: மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 1,715 வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில், மொத்தம் 15,97,467 பேர் வாக்களிக்க உள்ளனர், இதில், 7,73,433 ஆண் வாக்காளர்களும், 8,23,738 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினர் 296 பேரும் அடங்கும்.



பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்கு சாவடியில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தனது வாக்கை பதிவு செய்தார். முறை வாக்களித்து வந்த இளம் வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வரவேற்றார். 

அதேபோல, பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் வசந்தராஜன் போத்தனூர் ரயில்வே உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் காலை நேரத்திலேயே வாக்காளர்கள் வந்து வாக்களித்து செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...