பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப் பதிவு - முதல் முறை வாக்காளர்களுக்கு மரக்கன்று வழங்கி ஊக்குவிப்பு..!

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் 1,715 வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வெயில் காரணமாக காலையிலேயே,  வந்து வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி: மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 1,715 வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில், மொத்தம் 15,97,467 பேர் வாக்களிக்க உள்ளனர், இதில், 7,73,433 ஆண் வாக்காளர்களும், 8,23,738 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினர் 296 பேரும் அடங்கும்.



பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்கு சாவடியில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தனது வாக்கை பதிவு செய்தார். முறை வாக்களித்து வந்த இளம் வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வரவேற்றார். 

அதேபோல, பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் வசந்தராஜன் போத்தனூர் ரயில்வே உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் காலை நேரத்திலேயே வாக்காளர்கள் வந்து வாக்களித்து செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...