கவுண்டம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் சக்திபீடம் ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவிலின் 28ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா

ஸ்ரீ கருமாரியம்மன் சக்தி பீடம் பீடாதிபதி சிவ ஸ்ரீ செந்தில் சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசா அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் கௌமாரபாளையம் தவத்திரு ராமானந்த குமரகுருபரர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


கோவை: கோவை, கவுண்டம்பாளையம் கிரிநகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அமைந்திருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் சக்திபீடம் ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவிலின் 28ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா நேற்று (ஏப்ரல்.17) மிக விமர்சியாக நடைப்பெற்றது.

ஸ்ரீ கருமாரியம்மன் சக்தி பீடம் பீடாதிபதி சிவ ஸ்ரீ செந்தில் சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசா அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் கௌமாரபாளையம் தவத்திரு ராமானந்த குமரகுருபரர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



இவ்விழாவானது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ கருமாரியம்மன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா கணபதி ஹோமம், திருக்கொடியேற்றம், அவ்வை சண்முகி தெய்வீகக் குழு அம்மன் வேடமணிந்து சிறப்பு நடனம், ஸ்ரீதேவி நகர் வெற்றி விநாயகர் ஆலயத்திலிருந்து அக்னிகம்பம் எடுத்து வருதல், பூவோடு அக்னி ஏற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்குதல் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

மேலும் வருகின்ற (ஏப்ரல்.19) வெள்ளிக்கிழமை அன்று தீபாரதனை, அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்குதல் உடன் விழா இனிதே நிறைவடைய உள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...