மோடி தமிழகத்திற்கு 90 முறை வந்தாலும் தேர்தலில் பாஜகவின் தோல்வியை தடுக்க முடியாது - திருப்பூரில் வைகோ பேச்சு

தமிழ்நாட்டை பாதுகாக்கவும், இந்தியாவை பாதுகாக்கவும் இந்திய கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும். இந்துத்துவா மற்றும் சனாதன கூட்டத்திற்கு முடிவு கட்ட மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பராயன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருப்பூர் காந்திநகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திராவிட இயக்கத்தின் திருப்புமுனையாக அமைந்தது திருப்பூர். சுப்பராயன் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.



தமிழ்நாட்டை பாதுகாக்கவும், இந்தியாவை பாதுகாக்கவும் இந்திய கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும். இந்துத்துவா மற்றும் சனாதன கூட்டத்திற்கு முடிவு கட்ட மக்கள் முடிவு செய்துவிட்டனர். இந்த வெற்றி காஷ்மீர் வரை எதிரொலிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு 9 முறை வந்துவிட்டார். அவர் 9 முறையல்ல 90 முறை வந்தாலும் பாரதிய ஜனதா தோல்வியடைவதை யாராலும் தடுக்க முடியாது. மோடி கண்ணியமாக பேச வேண்டும். மாறாக தமிழக மக்கள் புண்படும் வகையில் பேசி வருகிறார். நடுநிலையாக பேசாமல் கடுமையாக பேசி வருகிறார்.

திராவிட இயக்கத்தை அழிப்பதாக தெரிவித்து வருகிறார். திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் வந்து நாடகம் ஆடி வருகிறார். தமிழர்களை ஏமாற்ற முடியாது. தமிழர், வளம், இனம் பண்பாடு பாதுகாக்க இந்திய கூட்டணி வெற்றி பெரும் எனக் கூறினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...