பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி தாராபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

பிஏபி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து பொன்னாபுரம் பிரிவு என்ற இடத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில் ருத்ராவதி, செங்காளிபாளையம், கணபதிபாளையம், சுங்கிலியம்பாளையம் உள்ளிட்ட பி.ஏ.பி. பாசனம் பெறும் பகுதிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு முதல் சுற்று தண்ணீர் விடப்பட்டது. முதல் சுற்று தண்ணீர் குறிப்பிட்ட கால இடைவெளியில் விடப்பட்ட நிலையில், 2-வது சுற்று தண்ணீர் இதுநாள் வரை திறக்கப்படாததால் முதல் சுற்று தண்ணீரை நம்பி பயிர்செய்த விவசாயிகள் தொடர்ந்து செய்த பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனது.

இதனால் பயிர்கள் கருகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி குண்டடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முறையிட்டு விரைந்து தண்ணீர் திறக்கக் கோரியும் பொதுப்பணித்துறையினர் செவி சாய்க்காத காரணத்தினால் நேற்று முன்தினம் பி.ஏ.பி. பாசனம் பெறும் ஆயக் கட்டு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பல்லடம் பொதுப்பணித்துறை எஸ்.டி.ஓ.நேரில் வந்து விவசாயிகளிடையே பேசினார்.



அப்போது விரைந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் இன்று தாராபுரம் கோவை மாநில நெடுஞ்சாலையில் பொன்னாபுரம் பிரிவு என்ற இடத்தில் விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் பிஏபி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பேருந்தில் கல்லூரி செல்வதற்காக காத்திருந்த மூன்று மாணவிகளை விவசாயிகள் காரில் அழைத்துச் சென்று பல்லடம் பேருந்து நிலையத்தில் மூன்று மாணவிகளை விவசாயிகள் இறக்கி விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...